search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்த்தி சுரேஷ்"

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷும் துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது.


    குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்

    இதற்கு கீர்த்தி சுரேசின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக நானே முதலில் அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    • கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
    • இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ், புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    • இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரகு தாத்தா'.
    • இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரகு தாத்தா படக்குழு

    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், அந்த பதிவில், " ரகுதாத்தா படப்பிடிப்பு நிறைவுற்றது. உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.


    திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருவதாகவும் அது விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது  தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ் -சமந்தா பதிவு

    இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, "நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

    • ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.
    • டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்த சிவகார்த்திகயனின் வீடியோ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் சிவகா்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    கீர்த்தி பதிவு

    இந்நிலையில், 'தசரா' படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், " செட் அகற்றப்படுவதற்கு முன்பாக ஓடிச் சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படம் இன்று வெளியானது.

    இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தசரா'. இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி ரூ.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.


    தசரா

    தசரா

    இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி சமூக வலைத்தில் பதிவிட்டிருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.


    விடுதலை

    விடுதலை

    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில், மிக்க நன்றி அண்ணா! என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சூரி-கீர்த்தி சுரேஷின் பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கேக் வெட்டி கொண்டாடிய தசரா படக்குழு
    கேக் வெட்டி கொண்டாடிய தசரா படக்குழு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட தசரா படக்குழு தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    தசரா

    தசரா

    தசரா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இணையத்தில் ஒருவர் தசரா பட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் இது எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

    • கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.

    தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். 

    கீர்த்தி சுரேஷ் பதிவு
    கீர்த்தி சுரேஷ் அறிக்கை

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது, 'சாணி காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன்” என்று பதிவிட்டு ‘சாணி காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  


    ×